தர்மபுரி, டிச.28: ஜிட்டாண்டஅள்ளி, அ.மல்லாபுரம் ஆகிய இடங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். கூட்டத்தில் எம்எல்ஏ சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெமினி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) தணிகாசலம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.