×

மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

 

அரியலூர், அக். 14: அரியலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 310 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Public Grievance Redressal Day Meeting ,Ariyalur ,Ariyalur district ,Ariyalur District Collectorate Hall ,Collector ,Rathinasamy ,
× RELATED மார்கழி பிறப்பு, பொங்கல் பண்டிகை...