திருவாரூர், டிச. 26: வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலையில் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் இருந்துவரும் பக்தவச்சல பெருமாள் கோயில், புலிவலம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், மடப்புரம் ராமசாமி பெருமாள் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதனையொட்டி கோயில்களுக்கு சென்ற பக்தர்களுக்கு அரசின் வழிகாட்டுதல் படி முககவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.