×

மகுடஞ்சாவடி அருகே விவசாயிகள் பேரணி

இளம்பிள்ளை, டிச.25: மகுடஞ்சாவடி வட்டாரம், அ.புதூர் கிராமத்தில் வேளாண்மைத் துறையில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், சிறுதானியங்களின் முக்கியத்துவம் தொடர்பான பேரணி, அட்மா திட்டத்தின் விவசாயிகள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஊராட்சி மன்ற தலைவர் அய்யமுத்து தலைமையில் நடைபெற்றது. மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிமேகலா தேவி கலந்துகொண்டு வரவேற்றுப் பேசினார். கவுன்சிலர் சுப்பிரமணி, அட்மா திட்ட தலைவர் சேகர் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். மேலும், கருத்தரங்கில் வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) கண்ணன் கலந்து கொண்டு பேசினார். இக்கருத்தரங்கில் வேளாண் உதவி செயற்பொறியாளர் கனகமணி, வேளாண் அலுவலர் பழனிசாமி, வட்டார வேளாண் அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா களப்பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Makutanjavadi ,
× RELATED மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை