×

காசிமேட்டில் திமுக கிராம சபை கூட்டம்: ஆ.ராசா பங்கேற்பு

தண்டையார்பேட்டை: காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது காசிமேடு மீனவ கிராம மக்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை கூட்டத்தில் தெரிவித்தனர். பின்னர் ஆ.ராசா பேசியதாவது, மீனவ மக்களின் எல்லா பிரச்னைகளையும் கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் பேசுகிறார். என்றாவது ஜெயக்குமார் முதலமைச்சரிடம் பேசியுள்ளாரா சில நாட்களுக்கு முன் என்னுடன் அதிமுக அரசை விவாதத்திற்கு அழைத்தேன். அதற்கு வரவில்லை கடிதம் மூலம் கூட பதில் அளிக்கும் யோக்கியதை இல்லை.

ஆளுநரிடம் போய் ஊழல் புகாரையெல்லாம் சொன்னோம். இப்படியெல்லாமா நடக்கிறது என ஆளுநர் எங்களிடம் கேட்டார். ஜெயலலிதாவிற்கு ஊழல் வழக்கில் என்ன நடந்ததோ அதேதான் முதல்வருக்கும் அவரது சகாக்களுக்கும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ், பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,meeting ,Grama Niladhari ,Coimbatore ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி