×

செப். 27ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், செப்.25: வரும் செப். 27ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியீட்டுள்ளனர். அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் செப். 27ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

Tags : Ariyalur ,Consumer Protection Department ,Ariyalur District Food Supply and Consumer Protection Department ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது