×

ஆறுமுகநேரியில் கிறிஸ்துமஸ் விழா அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்பு

ஆறுமுகநேரி, டிச.23:     ஆறுமுகநேரி மகிமையின் இயேசு மாறாதவர் ஊழியங்கள் சார்பில் 12வது கிறிஸ்துமஸ் விழா மடத்துவிளையில் நடந்தது. ஆரம்ப ஜெபத்தை மடத்துவிளை சேகரகுரு சிமியோன்பிரபு டேனியல் நடத்தினார். ஆறுமுகநேரி சேகர தலைவர் கிங்ஸ்லி என்.டேனியல் சிறப்பு ஜெபம் செய்தார். மகிமையின் இயேசு மாறாதவர் ஊழியங்கள் சார்பில் கிறிஸ்டின் கெனிஸ்டின் வரவேற்றார். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆறுமுகநேரி பேரூராட்சியில் பணிபுரியும் 60 தூய்மை பணியாளர்கள், 450 சிறுவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இளங்கோ, ஆறுமுகநேரி நகர செயலாளர் கல்யாணசுந்தரம், சோழர் செல்வின், அகஸ்டின், முன்னாள் கவுன்சிலர் வின்சென்ட், எலிசா, மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் சாத்ராக், வக்கீல் எட்வர்ட், இசிஐ ஏரியா சேர்மன் அந்தோணி, ஆறுமுகநேரி தேவ ஊழியர் ஐக்கிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Tags : Christmas Celebration ,
× RELATED வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி...