×

கால்வாய் சுத்தம் செய்ததற்கு சம்பளம் கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்: மாநகராட்சி ஒப்பந்ததாரர் கைது

அண்ணாநகர்: நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்தவர் ராமு (47). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கால்வாய் சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (41) வேலை செய்து  வருகிறார்.  நேற்று முன்தினம் நாகராஜ், தனது சம்பளத்தை தரும்படி ராமுவிடம் கேட்டுள்ளார். அதற்கு, ஏற்கனவே சம்பளம் கொடுத்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமு,  தனது  நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து நாகராஜை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். தடுக்க முயன்ற பொதுமக்களையும்  உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில், நாகராஜ் தலையில் பலத்த காயமும், 4 பேருக்கு  லேசான காயமும் ஏற்பட்டது.தகவலறிந்த வந்த கோயம்பேடு போலீசார், நாகராஜ் உள்பட 5 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மாநகராட்சி ஒப்பந்ததாரர் ராமு மற்றும் அவரது நண்பர் லோகநாதன் (47) ஆகிய 2 பேரை  கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Attack ,cleaning canal ,contractor ,Corporation ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...