ஈரோடு, டிச.22: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. முன்னதாக, காலை 7.30 மணிக்கு செங்கோடம்பாளையம் மாற்றுத்திறனாளிகள் உண்டு உறைவிட பள்ளியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஈபி ரவி, துணைத்தலைவர் பாஷா, முகமது அர்சத், சதீஸ், கார்த்தி, அஜீத், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 8 மணிக்கு சூரம்பட்டி அணைக்கட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா காலை உணவு வழங்கினார். இதில், 3ம் மண்டல தலைவர் திருச்செல்வம், பொதுச்செயலாளர் கண்ணப்பன், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, சேவாதள தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இதையடுத்து, 4ம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் ஈரோடு மரப்பாலம் நால் ரோடு அருகே உள்ள சித்திக் திடல் மசூதியில் சிறப்பு தொழுகையும், 2ம் மண்டல தலைவர் விஜய்பாஸ்கர் தலைமையில் ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜையும், புனித அமல அன்னை அமலாயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் மோகன், அம்மன் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மரப்பாலத்தில் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலையில் முன்னாள் துணை மேயர் பாபு என்ற வெங்கடசாலம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஈரோடு கனிராவுத்தர்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் சின்னுச்சாமி, மாநில எஸ்பி பிரிவு மாநில துணை தலைவர் ஆகியோர் தலைமையில் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார்.
முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ் 1ல் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ் தலைமையில், மாவட்ட துணை தலைவர்கள் கோதண்டபாணி, பாஸ்கர்ராஜ், பொதுச்செயலாளர்கள் வின்சென்ட், சாகுல் அமீது, மனித உரிமை துறை தலைவர் குமரேஷன் ஆகியோர் முன்னிலையில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் சுரேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல், ஈரோடு ஆர்.என்.புதூரில் 1ம் மண்டல தலைவர் அம்புலி என்ற அயூப் அலி தலைமையில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் புனிதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாணிக்கம் தியேட்டர் பகுதியில் 45வார்டு தலைவர் இப்ராகிம் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட துணைத்தலைவர்கள் காமராஜ் பூபதி, மோகன், மூர்த்தி, மாரியப்பன், மாவட்ட பொருளாளர் வெங்கட்ட கிருஷ்ணன், பொதுச்செயலாளர்கள் சச்சிதானந்தம், அரவிந்த்ராஜ், அன்பழகன், பச்சையப்பன், மாவட்ட செயலாளர்கள் பாலதண்டயுதம், ஆனூர் மோகன், கோபால், ராமகிருஷ்ணன், சிவா, கதிர்வேல், கணேஷ், சுகுமார், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் விஜய், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் துரைசாமி, நிர்வாக தலைவர் ரவி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்கண்ணா, வட்டார தலைவர்கள் நடராஜன், சிவக்குமார், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கோமதி, அங்காள பரமேஸ்வரி, பாரிஸ் அம்மாள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.