×

ம.பி.யில் வைரம் கண்டெடுத்த பழங்குடியின பெண்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் வைர சுரங்கம் உள்ளது. இதன் குறிப்பிட்ட பகுதியை ராஜ்பூரில் வசிக்கும் வினிதா கோண்ட் என்ற பழங்குடியின பெண் மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்து வைரம் தேடி வந்தனர். அப்போது 3 வைரங்களை வினிதா கண்டெடுத்தார். அவை 1.48 காரட் மற்றும் 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்டது. அந்த வைரங்கள் ஏலம் விடப்படும். அவை பல லட்சத்துக்கு ஏலம் போகும் என தெரிகிறது. இதுகுறித்து வைர வியாபாரி அனுபம்சிங் கூறும்போது, ‘இந்த வைரங்களில் ஒன்று உயர் தரம் உடையது. மற்றவை குறைந்த தரம் கொண்டவை’ என்றார்.

Tags : M. B. ,Bhopal ,Banna district ,Madhya Pradesh ,Vinita Kond ,Rajpur ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்