×

காஸ் அடுப்பில் பால் காய்ச்ச முயன்ற விவசாயி தீயில் கருகி பலி

திருவாரூர், டிச. 21: நன்னிலம் அருகே கேஸ் அடுப்பில் பால் காய்ச்ச முயன்ற விவசாயி தீயில் கருகி பலியானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகத்திற்குட்பட்ட வாழ்க்கை கிராம த்தை சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன் (59). விவசாயி. இவரின் மனைவி ஜெயலட்சுமி (50).நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த காஸ்அடுப்பில் சிவராமகிருஷ்ணன் பால் காய்ச்ச முயன்றார்.அப்போது எதிர்பாராத விதமாக அவர் உடல் மீது தீப்பிடித்தது. இதனால் வலி தங்க முடியாமல் கதறி கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், சிவராமகிருஷ்ணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இறந்த சிவராமகிருஷ்ணனின் மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை