×

செல்போன் விற்பனையாளர் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு, டிச.21: ஈரோடுகரூர் ரோடு ராஜூவ் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (30). இவர் ஈரோட்டில் செல்போன் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சண்முகபிரியா (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி குடும்ப செலவுக்காக நண்பர்கள் மற்றும் வெளி நபர்களிடம் கடன் பெற்றுள்ளார். கடனை செலுத்த முடியாமல் இருந்த தட்சிணாமூர்த்தி, சாஸ்திரி நகரில் உள்ள அவரது தந்தை பாலசுப்ரமணியம் வீட்டிற்கு கடந்த 16ம் தேதி வந்துள்ளார். கடன் பிரச்னையால் விஷம் குடித்து விட்டதாக தட்சிணாமூர்த்தி பாலசுப்ரமணியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தட்சிணாமூர்த்தியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Cellphone seller ,suicide ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...