×

நியாயவிலை கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பணிக்கு 2வது நாளாக நேர்முக தேர்வு

கரூர், டிச.18: கரூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இரண்டாவது நாளாக நேற்று நியாய விலைக்கடை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்காக கூட்டுறவுத்துறை சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணிகளுக்கு மாவட்டம் முழுவதிலுமிருந்து 7ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பம் செய்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், கரூர் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. தினமும் 700 நபர்கள் என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரண்டாவது நாளாக நேர்முக தேர்வு நடைபெற்றது.

Tags : interview ,salesman ,price shops ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு