×

விருதுநகரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள் குளமாகும் சர்வீஸ் சாலை

விருதுநகர், டிச.17: விருதுநகர் - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் விருதுநகர் வழி செல்லும் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக விரிசல் விட்டு காணப்படுகிறது. இந்நிலையில் விருதுநகரின் நுழைவு பகுதியில் பாலம் அருகே சர்வீஸ் ரோட்டில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது.

மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேற்றுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்கதையாகி உள்ளது. இதனால் சர்வீஸ் ரோட்டை பயன்படுத்த முடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சர்வீஸ் ரோட்டை ஒட்டி உள்ள வாறுகால் அடைப்பாகி, முழுமையாக இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீரை வெளியேற்ற நான்கு வழிச்சாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Service Road ,motorist pool ,Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...