திருமயம்.டிச.16: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள பழங்கரை சிவாலயத்தில் கடைசி சோமா வரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதற்காக 108 சங்குகள் கொண்டு சிவலிங்க வடிவில் அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சந்தனக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக கட்டுப்பாடுகள் இருப்பதால் அரசு அறிவித்தது போல் பக்தர்கள் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர்.