×

ஊட்டியில் த.ம.மு.க. மனித சங்கிலி போராட்டம்

ஊட்டி, டிச.16: தேவேந்திர குல வேளாளர் என அரசாைண வௌியிட கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஊட்டியில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமை வகித்தார். இதில், 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏடிசி., திடலில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என அரசாைண வெளியிட கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty ,human chain struggle ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...