கடையநல்லூர், டிச. 16: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியினர் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மமக மாவட்ட துணைச்செயலாளர் முகமது பாசித் தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக பொருளாளர் அப்துல் காதர், தமுமுக துணைத்தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட விவசாய அணி செயலாளர் மைதீன் அப்துல் காதர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவர் முகம்மது யாகூப், பசீர் ஒலி, அகமது ஷா விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் டேனி அருள் சிங், ரெசவு முகமது, அகமது ஷா, ராசப்பா உள்ளிட்டோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். இதில் நகர நிர்வாகிகள் செய்யது மசூது, சேகனா, முகமது அலி ,அப்துல் ரஹீம், விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.