திருச்செங்கோடு, டிச.15: திருச்செங்கோடு ரோட்டரி சங்கம், சர்வதேச ரோட்டரி சங்கம், அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா நாட்டு ரோட்டரி சங்கங்கள் இணைந்து ₹88 லட்சம் மதிப்பிலான பச்சிளம் குழந்தைகள் வார்டுக்கான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் தங்கமணி மற்றும் கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் வழங்கப்பட்டன. இன்பேண்ட் வெண்டிலேட்டர், கலர் டாப்ளர் போன்றவை முதல் கட்டமாக வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக அல்ட்ரா சவுண்ட் மெஷின், கிரிட்டிக்கூல், மல்டிபேரா மானிடர், ஓட்டோ அக்வாஸ்டிக் எமிசன் மெஷின், கார்டியோகிராபி போன்றவை வழங்கப்பட்டன. இவற்றை ரோட்டரி சங்க தலைவர் வாட்டர் பிரகாஷ் வழங்க, மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சித்ரா பெற்றுக்கொண்டு நன்றி கூறினார். நவீன உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் மாவட்ட கவர்னர் சண்முகசுந்தரம், செயலாளர் தனசேகர், பொருளாளர் நவலடி கார்த்திகேயன், முன்னாள் தலைவர்கள் ஜெகதீசன், செங்கோட்டுவேல், கார்த்திகேயன், டாக்டர் பிரகாஷ், மோகனபானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ...