தேவையானவை
கேழ்வரகு மாவு – கால் கப்
நாட்டுச்சர்க்கரை – அரை கப்
ஏலக்காய் – சிறிது
பாதாம் சீவியது – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – கால் கப்.
செய்முறை:
கேழ்வரகு மாவுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். கொதிவந்ததும் அதில் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். ஆறியதும் கொடுக்கலாம்.
