×

தொழிற்சாலை அமைக்க பூமிபூஜை

அலங்காநல்லூர், டிச.15:  அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணியஞ்சி, முடுவார்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் மத்திய அரசின் ரூபன் திட்டத்தின் கீழ்  அமையவுள்ள ரூ.50 லட்சம் மதிப்பிலான பேப்பர் கப், பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பூமி பூஜையையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் யூனியன் தலைவர் ராம்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெகராதா கிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயச்சந்திரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

‘மொட்டை’ மணி கைது

 மதுரை  ஜெய்ஹிந்துபுரம் எம்.கே.புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன்(25).  இவர்  நேற்று முன்தினம் மாலை ஜெய்ஹிந்துபுரம் 2வது தெருவில் நடந்து  சென்று  கொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள்,  கார்த்திகேயனை வழிமறித்து,  கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1350ஐ  பறித்துச் சென்றனர்.  இதுகுறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின்  பேரில், ஜெய்ஹிந்துபுரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில்  ஈடுபட்ட, இதே பகுதியை  சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன்(எ)மணி(30),  மணிகண்டன்(எ)மொட்டை மணி (25)  ஆகியோரை கைது செய்தனர்.

விதிமீறி பட்டாசு வெடிப்பு

 மதுரை  கீழவெளி வீதியில் உள்ள ஒரு சர்ச் அருகே சிலர் அனுமதியின்றி பட்டாசு  வெடித்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்வதாக காவல்  கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. கீரைத்துரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை நடத்தினர். அங்கு பட்டாசு வெடித்த தெற்குவாசல் சின்னக்கடை தெருவை சேர்ந்த முகமதுயாசின்(38),  கீரைத்துரையை சேர்ந்த தங்கமாணிக்கம்(33), பிரபு(30) மற்றும் குருசாமி(41) ஆகியோர் மீது வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

குடியால் கெட்டது குடி

மதுரை  கூடல்புதூர் செல்லையா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.  இவரது  மகள் காயத்ரி(23). இவர் கடந்த 2018ம் ஆண்டு ரஞ்சித் என்பவரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு  ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த காயத்ரி யாரும் இல்லாத நேரத்தில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இவரது தாயார்  பெரியநாயகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

சூதாட்ட கும்பல் கைது

மதுரை  விளாங்குடி  நேரு நகரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கூடல்புதூர்  போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. எஸ்ஐ அழகுமுத்து மற்றும் போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மன் ேகாயில் பகுதியில்  பணம் வைத்து சூதாடிய நேருநகரை சேர்ந்த செல்லப்பாண்டி(36), ராமன்(46),   பிரேம்(48), சுரேஷ்(30), ராஜா(50), சின்னத்தம்பி (35) ஆகிய 5  பேரையும்  கைது செய்தனர். அங்கிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும்  ரொக்கம் ரூ.600ஐ  பறிமுதல் செய்தனர்.

இளம்பெண் தற்கொலை

 கொட்டாம்பட்டி அருகே கம்பூரை சேர்ந்தவர் சரவணகுமார் மனைவி ராஜிபிரியா(24). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றது. குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று வீட்டில் ராஜிபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.

Tags : Bhoomipooja ,factory ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...