சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல்படை அலுவலகத்துக்கும் அதே மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. கடலோர காவல்படை அலுவலகத்தில் மோப்பநாய் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.
