×

விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: நீதிபதி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொல்லம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த ஒரு இளம்பெண்ணிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் செய்தார். இந்தப் புகார் கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், புகார் கூறப்பட்ட குடும்ப நல நீதிபதி உதயகுமாரை கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடம் மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிபதி உதயகுமாரை கேரள உயர்நீதிமன்றம் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

Tags : Thiruvananthapuram ,Kollam ,Udayakumar ,Kollam district ,Kerala ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்