×

மலேசியாவில் முதல் முறையாக நவம்பர் மாதம் ஜல்லிக்கட்டு

திருச்சி: இலங்கையை தொடர்ந்து மலேசியாவில் முதல்முறையாக நவம்பரில் ஜல்லிக்கட்டு நடை பெறுகிறது. இதுவரை 250 காளைகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான், மலேசியா எம்பி டத்தோ சரவணன் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கையை தொடர்ந்து மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை வரும் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த வம்சாவளி இளைஞர்கள் அதிகம் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு இதுவரை 250 காளைகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் 3 லட்சம் தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழர்கள் கலந்து கொள்வார்கள். அங்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உரிய பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். போட்டிகளுக்கான அனுமதி மற்றும் வரைமுறைகள் இந்தியாவில் இருப்பது போன்று இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. அதே முறை மலேசியாவிலும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Jallikattu ,Malaysia ,Trichy ,Sri Lanka ,Former ,Governor ,Eastern Province ,Senthil Thondaiman ,Datuk Saravanan ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...