×

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது 28ம் தேதி வரை கனமழை

சென்னை: ஒடிசா-மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40கிமீ வேகத்தில் வீசும். 27ம் தேதியில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

28ம் தேதியும் இதேநிலை நீடிக்கும். 31ம் தேதி வரை லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும், 29ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் உயரும் வாய்ப்புள்ளது. இன்று முதல் 28ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசும்.

Tags : Chennai ,North West Bay of Bengal ,Odisha-West Bengal ,Tamil Nadu ,Puducherry ,Karaikal ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...