சென்னை: ஆரணி தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன் பிறப்பே வா என்ற பெயரில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதிவாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13 முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரணி தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். சந்திப்பின் போது தொகுதி நிலவரம், வெற்றி நிலவரம், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்.
மேலும் என்ன எதிர்பார்க்கிறார் என்பது குறித்தும் கேட்டறிந்தார். கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என்றும், வெற்றி வியூகம் குறித்தும் அவர்களிடம் விளக்கி பேசியதாக கூறப்படுகிறது.
