×

வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கான நிதியை தாமதமின்றி வழங்க வேண்டும் கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை

பெரம்பலூர், டிச.11:கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் மாநில நிதிக்குழு மானிய நிதிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றங்களின் தலைவ ர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலை மையில் ஊராட்சி தலைவர்கள் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரி வித்திருப்பதாவது: உள்ளாட்சி தேர்தல் முடிந்து ஒராண்டு காலம் முடிவடை யும் நிலையில், மாநில அர சின்நிதி ஊராட்சிகளுக்கு வருவதில்லை, ஆகையால் மாநில அரசின் நிதி வருவ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.10 மாதங்களாக ஊராட்சிகளுக்கு வழங்கப் பட வேண்டிய மாநில நிதிக் குழு மானியநிதியை உடனே வழங்கிட வேண்டும். மாதம் தவறாமல் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரகவேலை உறுதியளிப் புத்திட்டத்தை அனைத்து ஊராட்சிகளுக்கும் பாகுபா டு இல்லாமல் பிரித்து வழ ங்கிட வேண்டும் என அந்த க் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் வெங்கட பிரியா மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags : Panchayat leaders ,village panchayats ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...