புரி: ஒடிசா மாநிலம் புரியில் உலக புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று கோயில் சுவரில் ஏறி உள்ளே செல்ல ஒருவர் முயன்றார். இதை பார்த்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பிடிபட்ட நபரின் பெயர் மனோஜ் சிங். உபி மாநிலம் அசம்காரை சேர்ந்தவர். அவரிடம் சிங்கத்துவார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
