பெரம்பலூர்,டிச.10: திருச்சி, பாலக்கரையில் உள்ள முதலியார் சத்திரம், ஆசாாரித் தெரு பகுதியில் வசிப்பவர் வேலாயுதம் மகன் கார்த்திக் என்கிறா மைதீன் பாபு.(31). இவர் சர்புனிஷா என்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, செங்கல் பட்டு மாவட்டம், திருக்கழுக்குன் றம் மசூதித் தெருவில் தனது மனைவி மற்றும் 2 குழ ந்தைகளுடன் வசித்தபடி கட்டிடங்களில், பிளாட்டுகளில் தகர மேற்கூரை அமைக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த ஒரு மாத மாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் தங்கிக் கொண்டு தகர மேற்கூரை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார். நேற்று இப்பணி களை மேற்கொண்டபோது 20 அடி உயரமுள்ள கட்டிடத் தின் மேலிருந்து தவறிவிழுந்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மைதீன்பாபுவை சகதொழிலாளர்கள் அரசு மரு த்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.