×

ஊராட்சித்துறையில் பணிப்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊட்டி, டிச. 10: நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இளநிலை வரைதொழில் அலுவலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.nigiris.nic.in  இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை 9ம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு)க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), உதகமண்டலம், நீலகிரி மாவட்டம், 643001 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அடுத்த மாதம் 7ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Tags : Supervisor ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு