×

சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு

திருச்செங்கோடு, மார்ச் 28: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வழங்கிய தேர்தல் திருவிழா அழைப்பிதழை, திருச்செங்கோடு நகராட்சி தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மாரியம்மாள், பரப்புரையாளர்கள் ஆனந்தி, சௌந்தர்யா, மஞ்சுளா, சுமதி மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று, சீர்வரிசை தட்டுகளுடன் அழைப்பிதழை வழங்கினர். அப்போது, அனைவரும், தவறாது வாக்களிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் சேகர், சுகாதார அலுவலர் வெங்கடாசலம், துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார், சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Namakkal District ,Collector ,Uma ,Tiruchengode Municipality Clean India Project ,Supervisor ,Mariammal ,Anandi ,Soundarya ,Manjula ,Sumathi ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...