சென்னை: சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க இல.கணேசன் உடலுக்கு முப்படைகளின் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
