கடலூர், ஏப். 5: ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி ஷோரூம் கடலூர் இம்பீரியல் சாலையில் புத்தம் புதிய ஷோரூமை திறந்துள்ளது. இந்த மிகப்பெரிய ஜுவல்லரி ஷோரும் தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளின் அதிநவீன கலெக் ஷகளுடன் மிக பிரம்மாண்டமானதாக இருக்கும். இந்த புதிய ஷோரூமை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் திறந்து வைத்தார். பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த திறப்பு விழா கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக ரூ.40 ஆயிரத்துக்கு தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் வைர நகைகளுக்கு 20 சதவீதம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 7 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
மேலும் பழைய 22 காரட் தங்க நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்து பிஐஎஸ் ஹால்மார்க் 916 தங்க நகைகள் அல்லது ஐஜிஐ சான்றிதழ் பெற்ற வைர நகைகள் கூடுதல் பலன்களுடன் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசும் வழங்கப்படும். மெட்டி, கொலுசு மற்றும் அரைஞாண் கொடி போன்ற வெள்ளி நகைகள் வாங்கும்போது சேதாரம் இல்லை. இவற்றுடன் திருமண பர்சேஸ்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளும் உண்டு. மேலும் தங்கத்தின் விலை ஏற்றத்திலிருந்து பாதுகாத்து கொள்ளும் விதமாக முன்னதாகவே புக்கிங் செய்யும் வசதியும் உண்டு. மாதாமாதம் ஒரு சிறிய தொகையை ஒதுக்குவதன் மூலம் எமது மாதாந்திர தங்க நகை திட்டத்தில் சேமித்து தூய தங்க நகைகளை வாங்கலாம். இவற்றுக்கு கூடுதல் சிறப்புச் சலுகைகளும் உண்டு. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த திறப்பு விழா சலுகைகளை வரும் 8ம் தேதி வரை பெறலாம்.
The post கடலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி புதிய ஷோரூம் appeared first on Dinakaran.