×

கடையை உடைத்து ரூ17 ஆயிரம் திருட்டு

வேளச்சேரி: கோவிலம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்தவர் கருணாகரன் (54). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ17 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடையை உடைத்து ரூ17 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Karunakaran ,Gandhi Nagar, Kovilambakkam ,Dinakaran ,
× RELATED பெட்டிக்கடைக்குள் புகுந்து...