நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பருவத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் கொடுத்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இண்டஸ்ட்ரியல் லா பாடத்தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மே 27ல் ஒத்திவைக்கப்பட்ட இண்டஸ்ட்ரியல் லா தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பருவத் தேர்வு வினாத்தாள் கசிவு: 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு appeared first on Dinakaran.
