×

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான 30 மனுக்கள் மீது வரும் 8ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: நீட் தேர்வு மற்றும் அதில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக மட்டும் மொத்தம் 30மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற வழக்குக்கு ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், நீட் முறைகேடு தொடர்பான மனுக்கள் அனைத்தும் வரும் 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. இதனால் நீட் தேர்வு விவகாரத்தில் அன்றைய தினம் எந்த மாதியான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான 30 மனுக்கள் மீது வரும் 8ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Supreme Court ,New Delhi ,Union Government ,National Examinations ,CBI ,
× RELATED எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி...