×

நாட்றம்பள்ளி அருகே முன்விரோத தகராறில் மாட்டிற்கு வெடி வைத்து, கொட்டகைக்கு தீ வைப்பு

*போலீசார் விசாரணை

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே முன்விரோத தகராறில் மாட்டிற்கு வெடி வைத்து, கொட்டகைக்கு தீ வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரி டேம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(50), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாட்டு கொட்டகை அமைத்து அதில் மாடுகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் மாடுகளை கொட்டகையில் கட்டிவிட்டி சென்ற அண்ணாதுரை நேற்று அதிகாலை வந்து பார்த்துள்ளார். அப்போது மாட்டு கொட்டகை முழுவதும் எரிந்து, ஒரு மாட்டின் தாடை கிழிந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் கொட்டகை அருகே வனவிலங்குகளுக்கு வைக்கும் வெடி பொருட்கள் இருப்பதை கண்ட அவர், இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த வனவிலங்குகளை வேட்டையாடும் இருவர் தன் மாட்டிற்கு வெடியை உணவில் வைத்து கொடுத்ததாகவும், கொட்டகையை தீ வைத்து கொளுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாட்றம்பள்ளி அருகே முன்விரோத தகராறில் மாட்டிற்கு வெடி வைத்து, கொட்டகைக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Natrampalli ,Annadurai ,Setteri Dam ,Velakkalnattam Panchayat ,Tirupathur ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் நேற்று கனமழை பதிவு