×

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் இன்று நாள் முழுவதும் ரத்து

சென்னை: புயல், மழை காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் இன்று நாள் முழுவதும் ரத்து செய்யபட்டுள்ளது, மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறப்பு ரயில்களாக இயக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பேசின் பிரிட்ஜ் -வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னையில் இருந்து மைசூர், கோவை, பெங்களூரு, திருப்பதி செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னை-மைசூரு சதாப்தி, சென்னை-கோவை விரைவு, சென்னை-கோவை சதாப்தி, சென்னை-பெங்களூரு ஏசி டபுள் டக்கர், சென்னை-பெங்களூரு பிருந்தாவன், சென்னை-திருப்பதி சப்தகிரி ஆகிய ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தெற்கு ரயில் வே தெரிவித்துள்ளது.

சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. முன்னதாக 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது வேகம் சற்று அதிகரித்துள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சென்னை வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தபட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடபட்டுள்ளன.

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறப்பு ரயில்களாக இயக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் இன்று நாள் முழுவதும் ரத்து appeared first on Dinakaran.

Tags : Suburban ,Chennai ,
× RELATED புகையிலை பதுக்கியவர் கைது