- பச்சையப்பன் கல்லூரி அறங்காவலர்
- சென்னை
- பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை
- பச்சையப்பன் அறக்கட்டளை
- காஞ்சிபுரம்
- கடலூர்
- தின மலர்
சென்னை: பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையில் ரூ.39.50 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் என 6 இடங்களில் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அறக்கட்டளை அறங்காவலர்களின் பதவிக்காலம், கடந்த 2018ம் ஆண்டு நிறைவடைந்து பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பச்சையப்பன் அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கல்லூரி அறக்கட்டளையின் கண்காணிப்பாளராக கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை இருந்த சேகர் என்பவர், பச்சையப்பன் அறக்கட்டளையின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ.39.50 லட்சம் எடுத்து முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி போலீசார் ரூ.39.50 பச்சையப்பன் அறக்கட்டளையின் கண்காணிப்பாளராக பணியாற்றிய சேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.39.50 லட்சம் முறைகேடு நடந்ததாக பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகி மீது புகார்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.