×

பராமரிப்பு பணிக்காக மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் 2 நாள் மூடல்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், பராமரிப்பு பணிக்காக வரும் 26ம் தேதி முதல் 2 நாட்கள் செயல்படாது என்றும் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வரும் 26ம் தேதி காலை 10 மணி முதல் ஜன.28ம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு வாரியத்தின் https://cmwssb.tn.gov.inஎன்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு பணிக்காக மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் 2 நாள் மூடல்: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Chennai Drinking Water Board ,CHENNAI ,Chennai Water Board ,Meenjur ,Dinakaran ,
× RELATED ஈசிஆரில் திருவான்மியூர் முதல் அக்கரை...