×

பீர் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென கவிழ்ந்தது: சாலையில் ஆறாக ஓடியது பீர்

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே, பீர் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே, நேற்று முன்தினம் மாலை, பீர் லோடு ஏற்றிய லாரி வந்தது. மேம்பாலம் ஏறும் பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்பு சுவரில் மோதி, சர்வீஸ் ரோட்டில் சிறிது தூரம் சென்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். லாரியிலிருந்து பாட்டில்கள் ரோட்டில் விழுந்து, உடைந்து சாலையில் பீர் ஆறாக ஓடியது. தகவலறிந்து குருபரப்பள்ளி போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் வந்து விசாரித்தனர். அந்த லாரி கோவாவில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு, பாண்டிச்சேரிக்கு சென்றது தெரியவந்தது. பீர்பாட்டில்கள் லாரி கவிழ்ந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டனர். இதையடுத்து, சிதறி கிடந்த பீர்பாட்டில்களைபொக்லைன் மூலம் மீட்கும் பணி நடந்தது.

The post பீர் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென கவிழ்ந்தது: சாலையில் ஆறாக ஓடியது பீர் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kurubarappalli ,Krishnagiri District ,Bandarapalli Development ,Dinakaran ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மேலும் ஒரு நாதக பிரமுகர் கைது