×

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

திருச்சி- மதுரை சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ரூ.315 கோடி மதிப்பில் டைடல் பூங்கா கட்டப்பட உள்ளது. 5.58 லட்சம் சதுர அடியில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்களுடன் அமைய உள்ள டைடல் பூங்காவின் கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த டைடல் பூங்காவை 18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் பிரமாண்ட ஒருங்கிணைந்து நவீன பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில், புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையம் அருகில் இந்த டைடல் பூங்கா மூலம் பல்வேறு நிறுவனங்கள் திருச்சியில் அடி எடுத்து வைக்க வாய்ப்பு உள்ளது.

The post திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tidal Park ,Trichy ,Panjapur ,Trichy-Madurai road ,Tamil Nadu government ,
× RELATED 1200 பேருக்கு வேலைவாய்ப்பு; சென்னை,...