×

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: மேலும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்டு 12 வயதுடைய 8ஆம் வகுப்பு மாணவி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உட்பட 11 பேர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சுதாகர், கமல் என மேலும் 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது கிருஷ்ணகிரி அருகே வினோதினி என்ற தனியார் பள்ளி முதல்வரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். ஜனவரி மாதம் மற்றொரு தனியார் பள்ளியில் நடந்த போலி முகாமில் மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை தொடர்பான வழக்கில் பள்ளி பெண் முதல்வரான வினோதினி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தற்போது வரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: மேலும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,NCC ,Dinakaran ,
× RELATED போலி என்சிசி முகாம் நடந்த...