×

77-வது சுதந்திர தின கொண்டாட்டம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200 போலீசார் பாதுகாப்பு பணி

சென்னை: 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே எஸ்.பி. பொன்ராம் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்;

ரயில்வே போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறையின் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருவதாகவும், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ரயில் நிலையங்களை சுற்றி கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. நிறுத்தப்பட்டுள்ள ரயில்களின் அடிப்பகுதி ரிப்ளெக்டர் கண்ணாடி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும், குமாரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post 77-வது சுதந்திர தின கொண்டாட்டம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 200 போலீசார் பாதுகாப்பு பணி appeared first on Dinakaran.

Tags : 77th Independence Day ,Central Railway Station ,Chennai ,Tamil Nadu ,Chennai Central Railway ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: இருவர் கைது