×

தமிழ்நாட்டில் நேற்று 3 இடங்களில் கனமழை பதிவு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 3 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. பழனி, கொடைக்கானல், காட்பாடியில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம், சோத்துப்பாறை, வடபுதுப்பட்டு, அணைப்பாளையத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை, போடி, அடையாமடை, அடவிநயினார்கோயில், செங்கோட்டை, நெல்லையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் நேற்று 3 இடங்களில் கனமழை பதிவு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,CHENNAI ,Palani ,Kodaikanal ,Katpadi ,Virinchipuram ,Sothupparai ,Vadaputhupattu ,Damampalayam ,Chennai Meteorological Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும்