×

வீட்டில் அழுகிய நிலையில் உடல் மீட்பு மனைவியை பிரிந்தவர் போதையில் தற்கொலை?

தேனி, ஏப்.19: தேனியில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவர் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.தேனி நகர் சுப்பன்செட்டி தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சிவக்குமார்(53). தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள கேஎம்சி பிளாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் வியாபாரம் செய்து ந்தார்ர். சிவக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மனைவி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதனால் கேஎம்சி பிளாட்டில் உள்ள வீட்டில் சிவக்குமார் தனிமையாக இருந்து வந்தார். தனிமையாக இருந்து வந்த நிலையில் மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து வந்தார்.

இந்நிலையில், சிவக்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டினருகே உள்ளவர்கள் சிவக்குமாரின் தந்தை பரமசிவத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பரமசிவம் மற்றும் சிவக்குமாரின் வீட்டினருகே குடியிருப்போர் வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல் சாத்திய நிலையில் இருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, சிவக்குமார் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.இதுகுறித்து பரமசிவம் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் சிவக்குமாரின் பிரேதத்தை உடற்கூறு பரிசோதனைக்காக தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிவக்குமார் மதுபோதையின் காரணமாக உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் அழுகிய நிலையில் உடல் மீட்பு மனைவியை பிரிந்தவர் போதையில் தற்கொலை? appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni Nagar Subpansetty ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை