
மதுரை: டிஜிபி பதவிக் காலம் ஆக.31ம் தேதியுடன் முடிவதால் புதிய டிஜிபி தேர்வை உடனே தொடங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி ஓய்வுக்கு பின் பதவியை நீட்டிக்கவோ, பொறுப்பு டிஜிபியை நியமிக்கவோ கூடாது என ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். புதிய டிஜிபியை தேர்வு செய்யக் கோரிய வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.
The post புதிய டிஜிபி தேர்வை உடனே தொடங்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு!! appeared first on Dinakaran.
