×

கோபி அருகே கார் கண்ணாடியை உடைத்து ரூ.7.30 லட்சம் கொள்ளை

கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7.30 லட்சம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. பவானிசாகரைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்குமார் (52) இவர் அவரது உறவினர் தங்கவேலுவிடம் ரூ.7.30 லட்சத்தை கடனாக கேட்டு வாங்கியுள்ளார். கடனாக வாங்கிய தொகையை காரில் வைத்து விட்டு டி.என் பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்துக்கு வந்துள்ளார்.

தோட்டத்தின் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்ற ரமேஷ்குமார் திரும்பிவந்து பார்க்கும் போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். மேலும் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் வைத்திருந்த ரூ.7.30 லட்சம் பணம் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் அளித்த புகாரை அடுத்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோபி அருகே கார் கண்ணாடியை உடைத்து ரூ.7.30 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Gobi ,Gobicettipalyam ,Gobicettipalayam. ,N.N. ,Palam ,Bhavanisakar ,Dinakaran ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது