×

இந்த ஆண்டு இறுதிக்குள் பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும்: விவசாய, தொழிலாளர் கட்சி கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: எந்த நாட்டில் கட்டமைப்பு பணிகள் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாட்டில் தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். துறைமுகங்கள், விமான நிலையம், ரயில்வே பாதை, மேம்பாலங்கள், சாலைகள், அணைகள் என வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கூடிய கட்டுமானங்களை வடிவமைத்து செய்து முடிக்க கூடிய ஆற்றலுக்கு சொந்தக்காரர்கள் கட்டுமானப் பொறியாளர்கள் ஆவர்.

அவர்களை நினைவு கூறும் வகையில் விசுவேசுவரைய்யா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி பொறியாளராக தினமாக கொண்டாடபடுகிறது. இந்த நாளில் பொறியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். கட்டுமான பொறியாளர்களுக்கு ஒரு பொறியாளர் கவுன்சில் அமைத்திட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. இந்த நீண்ட நாள் கோரிக்கையை இன்றைய அரசும் முதல்வரும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருப்பது மாபெரும் வெற்றியாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் பொறியாளர் கவுன்சிலை அரசு அமைத்து கொடுத்துவிடும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இந்த ஆண்டு இறுதிக்குள் பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும்: விவசாய, தொழிலாளர் கட்சி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Engineer Council ,Agrarian, ,Labor Party ,CHENNAI ,Tamil Nadu Farmers-Workers Party ,President ,Ponkumar ,Agrarian, Labor Party ,Dinakaran ,
× RELATED வேளாண்மையில் இணையவழி முதுகலை டிப்ளமோ படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு