×

10ம் தேதி உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

பாலக்காடு, டிச. 7:  பாலக்காடு மாவட்டத்தில் 10ம் தேதி உள்ளாட்சி தேர்தல் 2வது கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக மின்னணு இயந்திரங்கள், வாக்குச்சீட்டுகள், வாக்காளர்கள் பெயர் பட்டியல், மை ஆகியவை 9ம் தேதி வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும் மின்னணு இயந்திரங்கள் வேட்பாளர், பூத் ஏஜென்டு முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது மண்டபங்களில் மின்னணு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிதோதனை கருவிகள், மாஸ்க், கையுறைகள், சானிடைசர் ஆகியவை தேர்தல் அதிகாரிகளுக்கு 9ம் தேதி விநியோகம் செய்யப்பட்ட உள்ளது.

மேலும் தேர்தல் அன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தேர்தல் அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Election ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...