×

கடன் வாங்கியோர் திரும்ப தராததால் காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூரை சேர்ந்தவர் சக்திகுமார் (45). கட்டிட காண்ட்ராக்டர். இவரிடம், சமத்தூரை சேர்ந்த கணேசமூர்த்தி ரூ.2.50 லட்சமும், கருப்பம்பாளையத்தை சேர்ந்த சாதிக் பாஷா ரூ.1.80 லட்சமும், ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்நாதன் ரூ.8 லட்சமும் வாங்கியதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரிடமும் கொடுத்த பணத்தை சக்திகுமார் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை கொடுக்க அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், சக்திகுமார் விரக்தியடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜமீன்கோட்டாம்பட்டி ராமர்கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் சக்திகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு சக்திகுமார், ‘‘எனது சாவுக்கு என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த கணேசமூர்த்தி, சாதிக்பாஷா, செந்தில்நாதன் ஆகிய 3 பேர் காரணம்’’ என தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் வாங்கியோர் திரும்ப தராததால் காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Shaktikumar ,Kottoor ,Coimbatore district ,Ganesamurthy ,Samathdur ,Sadik Pasha ,Karupampalayam ,Senthilnathan ,Aval ,Chinnampalayam ,
× RELATED கேரளாவிலிருந்து மீன் கழிவுநீரை...